Islamic Widget

October 16, 2011

பண்ருட்டியில் திடீர் மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு


பண்ருட்டி:பண்ருட்டியில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பண்ருட்டி நகரத்தில் நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதியம் 1.30 முதல் 3.30 மணி வரை கொட்டித் தீர்த்த மழையால் நகரமெங்கும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் நிரம்பி கழிவுநீருடன் சாலைகளில் வழிந்தோடியது.பஸ் நிலையம் எதிரில், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலை பகுதியில் மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.இதனால் பஸ் நிலையம் எதிரில், கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதித்தது. ராஜாஜி சாலையில் செல்லும் வாகனங்கள் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

No comments:

Post a Comment