Islamic Widget

February 13, 2011

நபிகள் நாயகம் பிறந்த நாள் மதுபான கடைகள் மூட உத்தரவு

கடலூர் : நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 16ம் தேதி மதுபானக் கடைகளை மூட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 16ம் தேதி மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 அதன்படி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் 16ம் தேதி அன்று மதுபானக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மீறி மதுபான கடைகள் திறந்திருந்தாலோ அல்லது மதுபானம் விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source: Dinamalar


No comments:

Post a Comment