பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மீனவர்களுக்கு மீன் பிடித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம், முடசல் ஓடை கிராமங்களில் தேசிய மீன் வளர்ச்சி வாரியம் மற்றும் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மீனவர்களுக்கு மதிப்பிடக்கூடிய மீன் பொருட்கள் தயாரித்தல், ஜி.பி.எஸ்., கருவி இயக்குதல், இன்ஜின் பழுது நீக்குதல் மற்றும் சுகாதாரமான முறையில் மீன் பிடித்தல், கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் இளங்கோவன் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் கிராம வள மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி பேசுகையில், தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வாரியத்தின் மூலம் நடத்தப்படும் பயிற்சிகள் குறித்தும், குறும்படத்தின் மூலம் மீனவர்களுக்கு சுகாதாரமான முறையில் மீன்களை பிடித்தல் மற்றும் கையாளுதல் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட மீன் வளத்துறை மேற்பார்வையாளர் ராமலிங்கம், மணிகண்டன், கனகவள்ளி, வீரராஜ் பங்கேற்றனர்.
Source:dinamalar
January 04, 2011
பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு மீன்பிடித்தல் திறன் மேம்பாடு பயிற்சி
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!
- ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: நான்கு பேர் கைது
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- ரெட்டியூரில் பள்ளிவாசல் திறப்பு
No comments:
Post a Comment