கடலூர் : கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்த நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.பல இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடியாததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இன்று (6ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
Source:dinamalar
No comments:
Post a Comment