பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே சாலையின் மேல் தண்ணீர் செல்வதால் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அருகே கள்ளுகடைமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேல் பூவாணிக்குப்பம் கிராமத்திற்குச் செல்ல நெடுஞ்சாலைத் துறை சாலை உள்ளது.
பருவமழை காரணமாக பெருமாள் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் பூவாணிக்குப்பம் கிராமத்திற்கு வந்ததால் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளது. மேலும் பூவாணிக்குப்பம் சாலையில ஒரு கி.மீ., தூரத்திற்கு சாலையின் மேல் மூன்று அடி உயர்த்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூவாணிக்குப்பத்தில் உள்ளவர்கள் கடலூர், சிதம்பரம் செல்ல கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்பதால் இரண்டு நாட்களாக சம்பாரெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வந்து பஸ் ஏறுகின்றனர். பள்ளி மாணவர்கள் குள்ளஞ்சாவடி வழியாக கடலூருக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் பரவனாறு வழியாக வடிந்தால்தான் இயல்பு வாழ்க்கை திரும்பும்.
Source:dinamani
November 23, 2010
சாலையின் மேல் தண்ணீர் செல்வதால் 2 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- உலகின் உயரமான இளம்பெண்
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
No comments:
Post a Comment