சென்ற ஆண்டு நிலவை குறித்த ஆய்வை அமெரிக்காவின் “நாசா” விண்வெளி விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அப்போது நிலவில் மேற்பரப்பில் 5 சதவீதம் அளவுக்கு ஐஸ்கட்டி படிவங்கள் இருப்பதாக கண்டுபிடித்தனர். அதை வைத்து நிலவில் தண்ணீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் பலனாக நிலவின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், ஒரு டன் பாறையில் இருந்து சுமார் 13 காலன்கள் அளவு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என கண்டறிந்துள்ளனர். அந்த தண்ணீரை சுத்திகரித்தால் குடிநீராக பயன்படுத்த முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், அந்த தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து ராக்கெட்டுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்களும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நிலவில் போதிய அளவு குடிநீர் உள்ளது நிரூபணமாகியுள்ளது என நாசாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Source: inneram.com
October 24, 2010
நிலவில் போதுமான அளவு தண்ணீர்! நாசா அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- பேஸ்புக்கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் : இனி முன் அனுமதி தேவையில்லை.
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment