Islamic Widget

October 28, 2010

செக் மோசடி வழக்கு; ஆசிரியருக்கு சிறை; பரங்கிப்பேட்டை கோர்ட் தீர்ப்பு

பரங்கிப்பேட்டை : செக் மோசடி வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கீரப்பாளையம் திருப்பணி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (45). மீன்சுருட்டி அடுத்த கஞ்சன் கொல்லை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி புவனகிரி எம்.பி., கோவில் தெருவில் இரும்பு கடை வைத்துள்ள வீரமணியிடம், 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி செக் கொடுத்தார். அதை வீரமணி, வங்கியில் செலுத்தியபோது பழனிவேல் கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இதுகுறித்து வீரமணி, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் இளங்கோவன், செக் மோசடி செய்த ஆசிரியர் பழனிவேலுவிற்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்தார்.

Source: Dinamalar - Photo: mypno

No comments:

Post a Comment