Islamic Widget

August 21, 2010

கடலூர் மாவட்டத்தில் கனமழை அதிகபட்சமாக 90 மி.மீ., பதிவு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக கீழ்ச் செருவாயில் 90 மி.மீ., மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென மழை கொட்டியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கடலூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடானது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. கடந்த 2 நாட் களாக கடல் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ.,ல் வருமாறு: கீழ்செருவாயில் 90, பெலாந்துறை 71, தொழுதூர் 70, விருத்தாசலம் 68, காட்டுமன்னார்கோவில் 52, மேமாத்தூர் 51, லக்கூர் 48, கடலூர் 48, ஸ்ரீமுஷ் ணம் 45, வேப்பூர் 45, குப்பநத்தம் 43.40, காட்டுமைலூர் 37, லால்பேட்டை 37, வானமாதேவி 16, சேத்தியாத்தோப்பு 13, புவனகிரி 12, பரங்கிப்பேட்டை 8, அண்ணாமலை நகர் 7, கொத்தவாச்சேரி 5, பண் ருட்டி 5, சிதம்பரம் 4 மி.மீ., மழை பெய்துள்ளது. இவற் றில் திட்டக்குடி அருகில் உள்ள கீழ்ச்செருவாயில் அதிகபட்சமாக 90 மி.மீ., மழை பெய்துள்ளது. கடும் மழையால் கடலூரில் நேற்று வகுப்புகள் வைத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன.

No comments:

Post a Comment