Islamic Widget

July 22, 2010

கார் மீது லாரி மோதி வாலிபர் பலி

பரங்கிப்பேட்டை : இண்டிகா கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
வடலூர் ஆர்.சி., காலனியைச் சேர்ந்தவர் ராஜா (25). காடாம்புலியூர் பெரியபுறங்கனியைச் சேர்ந்த ராஜ்குமார் (22). இருவரும் இண் டிகா காரில் சொந்த வேலையாக சிதம்பரம் சென்று கடலூர் திரும்பினர். புதுச்சத்திரம் அடுத்த கள்ளுமேடு அருகே சென்ற போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத் தில் காரை ஓட்டிச் சென்ற ராஜ்குமார் சம் பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment