Islamic Widget

March 14, 2011

பாபர் மசூதி இடிப்பு, பா.ஜனதாவுக்கு மோசமான களங்கத்தை ஏற்படுத்திவிட்டது அத்வானி கருத்து

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், பா.ஜனதா கட்சியின் நற்பெயருக்கு மோசமான களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக, அத்வானி கூறி இருக்கிறார். துயரமான நாள்

கடந்த 1992-ம் ஆண்டில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இணைய தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது-
“பாபர் மசூதி இடிக்கப்பட்டு இரு வாரங்கள் கழித்து பத்திரிகை கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டு இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். சர்ச்சைக்குரிய அந்த கட்டிடம் இடிக்கப்பட்ட நாள், எனது வாழ்நாளில் மிகவும் துயரமான நாள் என்று அதில் கூறி இருந்தேன்.நம்பகத்தன்மை பாதிப்பு
நான் அப்படி கூறி இருந்ததற்கு கட்சியில் என்னுடன் பணிபுரியும் சிலர், நீங்கள் அப்படி ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? என்று விமர்சித்து இருந்தனர்.அதற்கு பதில் அளித்த நான், “அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால், டிசம்பர் 6-ந்தேதிய நிகழ்வால் (பாபர் மசூதி இடிப்பு) நமது கட்சியின் நம்பகத்தன்மை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக” குறிப்பிட்டு இருந்தேன்.

ராமர் கோவில் செயல் திட்டம்

அன்று நடைபெற்ற இயக்கத்தில் பங்கேற்ற தொண்டர்களின் பொறுமையின்மையை மதிப்பீடு செய்ய தவறிவிட்டதாக, இயக்கத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளின் மீது குற்றம் சாட்டப்படலாம் என்றும் அந்த கட்டுரையில் நான் எழுதி இருந்தேன்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று, ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அப்போதைய உத்தரபிரதேச மாநில அரசு, மிகவும் கவனத்துடன் செயல் திட்டம் ஒன்றை தயாரித்து அதை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தது.எந்த ஒரு சட்ட விதிகளையோ அல்லது கோர்ட்டு உத்தரவுகளையோ மீறாத வகையில், கோவில் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செயல் திட்டத்தை அந்த துயர நிகழ்வால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது”.இவ்வாறு அத்வானி கூறி இருக்கிறார்.

No comments:

Post a Comment