Islamic Widget

March 16, 2011

பரங்கிப்பேட்டை மக்களே "பைக்" ஓட்டி செல்வோர் உசார்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தச்சு தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவை மாநிலம் முருகம்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.இவரது மகன் திருமலைசாமி (வயது 35).தச்சு தொழிலாளி.இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வந்தார்.பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.
அவர் பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி கடலூர்- சிதம்பரம் மெயின் ரோட்டில் சென்ற போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து திடீரென தாக்கினர்..பின்னர் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.இது பற்றி திருமலைசாமி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கலாவதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் மோட்டார் சைக்கிள் பி.முட்லூர் மெயின் ரோட்டோரம் கிடப்பது தெரிய வந்தது. அதையடுத்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர்.தொடர்ந்து 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.


source: dailythanthi

2 comments:

  1. சொல்வோர், அல்ல செல்வோர் என எழுதுங்க நானா

    ReplyDelete
  2. தங்கச்சி ராபியா நன்றி

    ReplyDelete