சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. இது கடவுள் கொடுத்தது என்று இக்குழந்தைகளின் தந்தை கூறியுள்ளார். சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். 3-ஆவது மாதத்தில் பரிசோதனைக்காக சாந்தியின் கணவர் ஆனந்த் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். தற்போது, தாயும், குழந்தைகளும் நன்றாக உள்ளனர். 4 குழந்தைகள் பிறந்தது குறித்து ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``முதலில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர். பின்னர், பிரசவத்தின்போதுதான், 4 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தனர். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது ஒரு குழந்தை மறைந்த நிலையிலேயே இருந்துள்ளது. அதனால்தான், 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். எத்தனை குழந்தை என்றாலும், எல்லாம் கடவுள் கொடுத்தது'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
Source:inneram
No comments:
Post a Comment