Islamic Widget

January 31, 2011

பாப்ரி மஸ்ஜித்:தமிழகத்தில் சிறப்புடன் நிறைவுற்ற பாப்புலர் ஃப்ரண்டின் பிரச்சாரம்

சென்னை,ஜன.31:பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும், லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக்கோரி கடந்த இரண்டு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
இப்பிரச்சார நிகழ்ச்சியின் இறுதியாக தமிழகத்தில் சென்னை, திருவாரூர், திண்டுகல், நாகர்கோவில், கோவை ஆகிய நகரங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் என்.சி.ஹெச்.ஆர்.ஒ மாநிலத் தலைவர் பவானி ப.மோகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்ஸாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment