ஈரானின் மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய 31-வது ஆண்டுவிழா ஈரானில் கொண்டாடப்பட்டது.
இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரானில் முன்பு அமெரிக்க தூதரகம் அமைந்திருந்த கட்டிடத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் ஒன்று கூடினர். பேனர்கள் மற்றும் கொடிகளுடன் வந்த மக்கள் திரள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிராக கோஷங்களை எழுப்பினர்.
அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்லாமிய புரட்சி வெற்றிப்பெற்று ஒருவருடம் முடிவடையும் முன்பு 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் பல்கலைக்கழக மாணவர்கள் தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றினர்.
தேசத்துரோகிகள் சதித்திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தும் மையமாக அமெரிக்க தூதரகம் மாறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டித்தான் அதனை ஈரான் மாணவர்கள் கைப்பற்றினர்.
இஸ்லாமிய அரசை கவிழ்ப்பதற்கு அமெரிக்க தூதரகம் முயற்சி மேற்கொண்டதற்கான ஆதாரங்களை பின்னர் மாணவர்கள் வெளியிட்டனர். சர்வதேச சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தின் தினமாகத்தான் ஈரான் நவம்பர் 4 ஆம் தேதியை அனுஷ்டிக்கிறது.
ஈரான் இளைய தலைமுறையின் வீரத்தின் அடையாளம்தான் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய நிகழ்வு என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு

No comments:
Post a Comment