கடலூர் : கடலூர் நகராட்சி பஸ் நிலையத்தில் தேங்கியுள்ள அசுத்த நீரால் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த பழைய வணிக வளாகக் கட்டடம் இடிக்கப்பட்டது. காலியாக கிடக்கும் இந்த இடத் தில் கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால் அந்த இடத்தின் அருகே பூங்கா வைத்து பராமரிக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பட்ட இடம் பள் ளமான பகுதியாக இருப்பதாலும் மழை நீர் வெளியேற முடியாமல் உள்ளதாலும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள கழிவுகள், பாலிதீன் பைகள், பூக்கள் குப்பைகள் என சேர்ந்துள் ளன. அத்துடன் இரவு நேரங்களில் கழிப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதுடன் கொசு அதிகரித்துள்ளது. பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் போன்றவற்றில் அவதிப்படும் மக்களுக்கு இந்த அசுத்தமான குளத் தால் மேலும் பல தொற்றுநோய்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
Source: Dinamalar
October 07, 2010
பஸ் நிலையத்தில் "மினி கூவம்' சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- பரங்கிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 94-வது ஆண்டு விழா
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment