சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 78வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா, சாஸ்திரி அரங்கில் நேற்று நடந்தது. கவர்னரும் பல்கலைக் கழக வேந் தருமான சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங் கினார். துணைவேந்தர் ராமநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். பிஎச்.டி., 152 பேருக்கும், எம்.பில்., 63 பேருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பேருக்கு தங்கப் பதக்கம், 120 மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
2009-10ம் கல்வியாண்டில் நேரடியாக படித்த, 6,303 மாணவ, மாணவியர், தொலை தூரக்கல்வி மூலம் படித்த, 99 ஆயிரத்து 573 என மொத்தம் ஒரு லட்சத்து 5,876 பேர் பட்டம் பெற்றனர். கவர்னர் பட்டம் வழங்கியது போக மற்றவர் களுக்கு கவர்னர் அனுமதியுடன் அனுப்பி வைக்கப்படும்.
டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக், பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி மற்றும் செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர் முகமது அக்தர் சித்திக் பெயரில், 50 ஆயிரம் ரூபாய் நிதியில் அறக் கட்டளையை எம்.ஏ.எம்.ராமசாமி துவக்கி வைத்தார். காலை 11 மணிக்கு துவங்கிய பட்ட மளிப்பு விழா, 12.20 மணிக்கு நிறைவடைந்தது.
Source: Dinamalar
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
No comments:
Post a Comment