Islamic Widget

August 11, 2010

பூச்சிக்கொல்லி மருந்து கடலில் கலந்துவிட்டதா?

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமும்பை: சித்ரா கப்பலில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்துகள் அடங்கிய கன்டெய்னர்களும் கடலில் விழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மகாராஷ்டிர சுற்றுச்சூழல் அமைச்சர் சுரேஷ் ஷெட்டி நேற்று கூறியதாவது:
சித்ரா கப்பலில் மொத்தம் 31 பூச்சிக்கொல்லி மருந்து கன்டெய்னர்கள் ஏற்றப்பட்டிருந்தன. இவை கப்பலின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, கடலில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. கப்பலில் எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டுள்ளது. கடலில் டீசல் பரவியுள்ளதால், தண்ணீர் எந்தளவுக்கு மாசுபட்டுள்ளது என்பதை பார்க்க மாதிரிகளை சேகரித்து ஆய்வு கூடத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு கப்பல் நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேப்டன்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு சுரேஷ் ஷெட்டி கூறினார்.

No comments:

Post a Comment