இதற்காக பரங்கிப்பேட்டையின் முக்கிய தெருக்களில் தீயணைப்பு வண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாகச் சென்றது. இது குறித்து தீயணைப்புத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரியவர்களின் மேற்பார்வையில் தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.காலை 6 மணி முதல் இரவு 10 மணி முடிய பட்டாசுகளை வெடிக்கலாம்.
பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்க், மின்சார டிரான்ஸ்பார்மர், மார்க்கெட், குடிசைகள் அருகில் வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. பரந்த மைதானத்தில் வைத்து தான் ராக்கெட்டுகளை வெடிக்க வேண்டும். ஆடையில் தீப்பற்றினால் ஓடாமல் தரையில் படுத்து உருளவேண்டும். தீப்புண்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீர்ஊற்றி மெல்லியதுணியால் மூடி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் 100 மற்றும் 101 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:MYPNO.COM
No comments:
Post a Comment