Islamic Widget

August 25, 2012

மாவட்டத்தில் தினமும் 12 மணி நேரம் மின்தடை: இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதி

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 12 மணி நேரம் மின்தடை: இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின்தடை அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்ததால் மின்சப்ளை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக தினமும் 4 அல்லது 5 மணி நேரம் மின்தடை இருந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, பண்ருட்டி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுமார் 12 மணி நேர மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவில் 4 முறை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் தூக்கமின்றி அவதியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5 அல்லது 6 மணி நேரம் மின்தடை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக தினமும் 12 மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டது.

இரவில் மட்டும் சுமார் 5 மணி நேரம் மின் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டனர்.

No comments:

Post a Comment