கடலூர், நவ.17-: கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடலூர், சிதம்பரம் உள்பட மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பின்னர் மழை ஓய்ந்து கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வந்த நிலையில் சிதம்பரத்தில் 7 மணி முதல் 11 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. அதேபோல் கடலூரில் காலை 10 மணி முதல் 11 மணிவரை கனமழை பெய்தது. நெல்லிக்குப்பத்தில் இன்று காலை 7 மணிமுதல் சுமார் 1/2 மணிநேரம் மழை தூறியது. கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் மழை நின்ற பிறகும் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ச்சியான நிலை நிலவியது.
No comments:
Post a Comment