Islamic Widget

September 12, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட முஹம்மது யூனுஸ் மீண்டும் விருப்ப மனு!


பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர்கள் மீண்டும் போட்டியிட கட்சியில் விருப்ப மனு கொடுத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சியிலும் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. தி.மு.க., சார்பில் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவிக்கு தற்போது தலைவர்களாக உள்ள முகமது யூனுஸ், ரவிந்திரன் ஆகியோர் மீண்டும் போட்டியிட கட்சியில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்...
அதேபோன்று பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட நகர செயலர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், மகளிரணி பொற்செல்வி ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.


source: dinamalar

No comments:

Post a Comment