Islamic Widget

March 07, 2011

பரங்கிப்பேட்டை கடலில் மூழ்கி பீகார் மாணவர் பலி

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவர் அமீத் குமார். விடுமுறை தினத்தையொட்டி பரங்கிப்பேட்டை கடலில் குளிப்பதற்காக வந்திருந்த அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் சிதம்பரத்திலிருந்து வந்த வண்ணமாக இருப்பதால் மாணவர்கள் கூட்டத்தால் பரப்பரப்பாக மருத்துவமனை வளாகம் இருக்கிறது. மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவமனை எதிரே அமர்ந்துள்ளனர்.
நன்றி: mypno

No comments:

Post a Comment