பரங்கிப்பேட்டை : முன் விரோதம் காரணமாக தம்பதியைத் தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (46). இவருக்கும் அவரது மைத்துனர் பன்னீர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அஞ்சாபுலி மகள் கலைச்செல்விக்கு நடந்த திருமணத்தின் போது சீர்வரிசையாக செய்த இரண்டு பவுன் நகையை பன்னீர், அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் திருப்பிக் கேட்டு அஞ்சாபுலி மற்றும் அவரது மனைவி கலாவைத் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பன்னீர், சிவக்குமார், அஞ்சனா ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
இந்நிலையில் கடந்த ஆண்டு அஞ்சாபுலி மகள் கலைச்செல்விக்கு நடந்த திருமணத்தின் போது சீர்வரிசையாக செய்த இரண்டு பவுன் நகையை பன்னீர், அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் திருப்பிக் கேட்டு அஞ்சாபுலி மற்றும் அவரது மனைவி கலாவைத் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பன்னீர், சிவக்குமார், அஞ்சனா ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment