Islamic Widget

February 19, 2011

பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளியில் ரூ.1 கோடி செலவில் புதிய மேட்ரிக்பள்ளி கட்டிடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்

பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளியில் ரூ.1 கோடி செலவில் புதிய மேட்ரிக்பள்ளி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் திறந்து வைத்தார்.

 புதிய கட்டிடம்

கடலூர் மவட்டம் பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளி வளாகத்தில் புதிதாக ரூ.1 கோடி செலவில் மெட்ரிக் மேல்நிலை பள்ளி கட்டிடம் கட்டபட்டு இ௫ந்தது.
 இதன் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவுக்கு பேரூராட்சிமன்ற தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பிரபாவதி அம்பாள் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வா்கள் லீலாவதி,சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


திறந்து வைத்தார்

விழாவில் சிறப்பு வி௫ந்தின்னராக கடலூா் மாவட்ட கலெக்டா் சீத்தாராமன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் ஆற்காடு ௫த்ரன் திருச்சபை பேராயா் விஜயகுமார், மெட்ரிக்பள்ளி ஆய்வாளா் அருள் மொழி பொறியாளர்கள் பஷீா் அகமது முஸ்தாக், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment