அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள விஜயகாந்த் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையே முழுமையான புரிந்துணர்வு ஏற்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முடித்து வெளியேவந்த தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
இருப்பினும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். அதன்படி நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். காலை முதல் துவங்கிய இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் ஒரு தொகுதிகூட தே.மு.தி.க.,வுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்பது இந்த கட்சியின் தற்போதைய பெரும் கவலையாக இருக்கிறதாம் . இதனால் மீண்டும் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிக்கலின் தொடக்கமாக, 160 தொகுதிகளில் தான் போட்டியிடுவதன் மூலமே எங்களுக்கு பெரும்பான்மை கிட்டும் வகையில் வெற்றி பெறமுடியும் என்பதில் அ.தி.மு.க., விடாப்பிடியாகவே இருந்தது. இதன் வெளி ரூபம் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கும் முன்பாக 160 வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டது. இதனையடுத்து இந்த கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதிர்ச்சியில் ஆடிப்போயின.
இந்த அறிவிப்பிற்கு பின்னர் இடதுசாரிகள், தே.மு.தி.க., பார்வர்டு பிளாக்கட்சி, அகிலஇந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஆகியன தனித்தனியாக ஆலோசனை நடத்தின. இதனால் அ.தி.மு.க., கூட்டணி உடைந்து 3 வது அணி உருவாகுமோ என்ற நிலைமை உணர்ந்த ஜெ., முதன் முதலாக துவக்கவிருந்த பிரசாரத்தை தள்ளி வைத்து விட்டு சமரச பேச்சு நடத்தினார். இந்த தருணத்திலும் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதன் பின்னர், வைகோ வெளிவந்ததும், தேர்தலைப் புறக்கணித்ததும் பழைய செய்தியாகி விட, இப்போது, தே.மு.தி.க.வும் பிய்த்துக் கொண்டு போகும் என்று தெரிகிறது.
இருப்பினும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். அதன்படி நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். காலை முதல் துவங்கிய இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் ஒரு தொகுதிகூட தே.மு.தி.க.,வுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்பது இந்த கட்சியின் தற்போதைய பெரும் கவலையாக இருக்கிறதாம் . இதனால் மீண்டும் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிக்கலின் தொடக்கமாக, 160 தொகுதிகளில் தான் போட்டியிடுவதன் மூலமே எங்களுக்கு பெரும்பான்மை கிட்டும் வகையில் வெற்றி பெறமுடியும் என்பதில் அ.தி.மு.க., விடாப்பிடியாகவே இருந்தது. இதன் வெளி ரூபம் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கும் முன்பாக 160 வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டது. இதனையடுத்து இந்த கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதிர்ச்சியில் ஆடிப்போயின.
இந்த அறிவிப்பிற்கு பின்னர் இடதுசாரிகள், தே.மு.தி.க., பார்வர்டு பிளாக்கட்சி, அகிலஇந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஆகியன தனித்தனியாக ஆலோசனை நடத்தின. இதனால் அ.தி.மு.க., கூட்டணி உடைந்து 3 வது அணி உருவாகுமோ என்ற நிலைமை உணர்ந்த ஜெ., முதன் முதலாக துவக்கவிருந்த பிரசாரத்தை தள்ளி வைத்து விட்டு சமரச பேச்சு நடத்தினார். இந்த தருணத்திலும் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதன் பின்னர், வைகோ வெளிவந்ததும், தேர்தலைப் புறக்கணித்ததும் பழைய செய்தியாகி விட, இப்போது, தே.மு.தி.க.வும் பிய்த்துக் கொண்டு போகும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment