கிள்ளை : "சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து பிச்சாவரத்திற்கு இயக்கிய அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நிலத் தாவரங்களைக் காணவும், படகு சவாரி செய்யவும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
வெளியூர்களிலிருந்து வருவதற்கு வசதியாக சென்னையில் இருந்தும், விழுப்புரம் மாளிகைமேடு வழியாகவும் அரசு பஸ் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இவ்வழியாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதேப்போன்று சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன் பெறும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் விழுப்புரத்திலிருந்து அர” பஸ்களை இயக்கவேண்டும் என மக்கள் அர”க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
source: dinamalar photos:pno.news
No comments:
Post a Comment