லண்டன் : லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கிளம்ப இருந்த விமானத்தின் விமானி அளவுக்கதிகமாக குடித்ததால் எங்கே ஓட்டி செல்கிறீர்கள் என்பதை மறந்த காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானம் ஓட்டும் 49 வயது விமானி ஜார்ஜ் லா பெர்லீ அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 ½ மடங்கு அதிகமாக மது அருந்தி இருந்தார். எங்கே விமானத்தை ஓட்டி செல்ல போகிறீர்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டதற்கு தான் நியூயார்க் செல்லவிருப்பதாக கூறினார். ஆனால் அவர் டெட்ராய்டுக்கு அவ்விமானத்தை ஓட்டி செல்ல வேண்டும்.அமெரிக்க குடிமகனான லா பெர்லீ 20 வருடங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஓட்டி செல்லவிருந்த விமானத்தில் மொத்தம் 241 பயணிகள் இருந்தனர். அவ்ரின் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கலாம் என அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
source: inneram
No comments:
Post a Comment