மதுராந்தகம்: பேருந்தில் பயணம் செய்த தங்க வியாபாரிகளிடமிருந்து 3 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை மர்ம நபர்கள் களவாடிச் சென்றது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்க நகை வியாபாரி மிஸ்ரிலால். இவருடைய மகன்கள் பரத் குமார் மற்றும் ரஞ்சித் குமார். இருவரும் தங்க நகை வியாபாரம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் தங்க நகை வியாபாரிகளிடமிருந்து தங்கக்கட்டிகளை வாங்கி வந்து, அவர்கள் விரும்பும் நகைகளை செய்து கொடுப்பர். கடந்த 11ம் தேதி, இருவரும் தாங்கள் செய்த நகைகளை வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு, தங்கக் கட்டிகள் வாங்கி வருவதற்காக, சென்னையிலிருந்து நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உட்பட மாவட்டங்களில், நகை வியாபாரிகளிடம். தாங்கள் செய்த நகைகளை விற்பனை செய்தனர்.இதற்கு பின் அவர்களிடமிருந்து வாங்கிய 3 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளுடன், சென்னை புறப்பட முடிவு செய்தனர். தங்கக் கட்டிகளை சூட்கேசில் எடுத்து கொண்டு, கடந்த 15ம் தேதி இரவு, திருப்பூரிலிருந்து தனியார் டிராவல்ஸ் பஸ்சில் சென்னை புறப்பட்டனர். 16ம் தேதி காலை 5.30 மணிக்கு, மேல்மருவத்தூர் வந்தபோது, தங்கக் கட்டிகள் இருந்த சூட்கேஸ் மாயமாகியிருப்பதை கண்ட சகோதரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பஸ் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பஸ்சில் பயணம் செய்தவர்களில், இருவர் திண்டிவனத்திலும், நான்கு பேர் மேல்மருவத்தூரிலும் இறங்கியுள்ளனர். அவர்கள் தங்கக் கட்டிகளை அபேஸ் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளை போன தங்கக் கட்டிகளின் மதிப்பு 70 லட்ச ரூபாய்.இது குறித்து, பரத் குமார் அளித்த புகாரில், மேல்மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார், அச்சிறுப்பாக்கம் ஆய்வாளர் பொன்னுசாமி, உதவி ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
January 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- 2ஜி வழக்கில் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை?
- காயிதேமில்லத் தெரு பெயர் பலகை ஆபாய நிலையில்
- இறப்புச் செய்தி
- பிச்சாரவம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர்கள் "ஸ்டிரைக்'
- இணையதளத்தில் சன் நியூஸ் நேரடி ஒளிபரப்பு ?
- சவூதி: மதீனா சாலை விபத்தில் 18 பேர் பலி; 32 காயம்
- Ministry of Health, Kingdom of Saudi Arabia (Direct Recruitment) , Interview in Delhi, Srinagar and Cochin
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
No comments:
Post a Comment