துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அருகே உள்ள ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஷார்ஜாவில் உள்ள ஒரு தொழிலாளர்கள் விடுதியில் (Labourers camp) இந்திய மற்றும் பாகிஸ்தானி தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு கைகலப்பு மோதலாய் மாறி மிஸ்ரி நஸீர் கான் எனும் பாகிஸ்தானியர் ஜனவரி 2009ல் கொல்லப்பட்டார்.
அது சம்பந்தமான வழக்கில் 17 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம் கேட்டு கொண்டதற்கிணங்க கொலை இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று விவரித்து காட்டும் சிடியை காவல்துறை ஒப்படைத்தது. ஆனால் காவல்துறை ஆஜராகதாதல் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை என்றும் அதனால் வழக்கு குறுக்கு விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல் பிந்து சுரேஷ் செத்தூர் கூறினார். குறுக்கு விசாரணை முடிந்து அன்றே தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source:.inneram
December 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- எல்லா மதானிக்களுக்காகவும் SDPI போராடும்- E.அபூபக்கர்
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
- (no title)
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- பரங்கிப்பேட்டையில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
- திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை
- ஈரான் அமெரிக்கப் போர் நெருங்குகிறது : டேனிஸ் நிபுணர்கள்
உம்மடி 17 பெருக்கு தூக்கா இப்படி செதிபோடு என்னட தூக்கத்தைகெடுகதிங்க இச்மாயிலு இத நெனச்சாவே என் ஈரகுல நடுங்குது ஹராரத்த இருக்கு
ReplyDelete