
திருநெல்வேலி: நெல்லையில், ராமதாஸ் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை, போலீசார் கைது செய்தனர். தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ராமதாஸ், தமக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், ஒன்றில் கூட முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை.
இதை கண்டித்து, நெல்லையில், பா.ம.க.,வைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், ராமதாசின் உருவ பொம்மையை எரிப்பதற்காக, ரோட்டிற்கு இழுத்து வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி, காயிதேமில்லத் பேரவை தலைவர் பீர்முகமது உள்ளிட்ட, 20 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment