Islamic Widget

November 20, 2011

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்!


தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பேருந்து  கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தி அரசு அறிவித்து இருக்கிறது.இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர மாவட்டக்குழு சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விக்ரமன் தலைமை தாங்கினார்.

அண்ணாத்துரை எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். வேல்முருகன் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். இதில் பங்கேற்ற குழந்தைகள் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு குடித்தனர். காலி பால் பாக்கெட்டுகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன. இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் திடீர் பால்விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பன உள்பட அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment