Islamic Widget

October 25, 2010

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாது -ப.சிதம்பரம்

இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



சிவகங்கை மாவட்ட காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், பெட்ரோலைத் தவிர மற்ற எரிபொருட்களை எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில்தான் விற்று வருகின்றன. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியமும், மண்ணெண்ணெய்க்கு ரூ.15 மானியமும் அரசு வழங்கி வருகிறது என்று கூறிய சிதம்பரம், இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் விலையை உயர்த்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் கூறினார்.


Source: webdunia

No comments:

Post a Comment