Islamic Widget

October 25, 2010

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு புதிய பஸ்

பரங்கிப்பேட்டை:கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு புதிய பஸ் போக்குவரத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.



கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நேற்று நடந்த இலவச கலர் டி.வி. வழங்கும் விழாவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச் சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கடலூர்-பிச்சாவரம் வரை செல்லும் புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பஸ் கடலூர்,ஆலப்பாக்கம், பெரியக்குப்பம் வழியாக பரங்கிப்பேட்டை வந்து,அங்கிருந்து பரங்கிப்பேட்டை புதிய பாலம் வழியாக கிள்ளை, பிச்சாவரத்திற்கு செல்கிறது.தினமும் 3முறை இந்த பஸ் இயக்கப்படுகிறது.இந்த பஸ் வசதி மூலம் இப்பகுதி மக்கள் மிகவும் பயன் அடைந்துள்ளனர்.





Source: Dailythanti, Photo: TNTJ PNO

No comments:

Post a Comment