அரசின் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் விழா பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்றது.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை வகித்தார்.இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன்,பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் முத்து பெருமாள்,பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், கவுன்சிலர் ஹாஜா கமால், காண்டீபன், நல்லத்தம்பி, மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: mypno, Photo: TNTJ PNO
No comments:
Post a Comment