Islamic Widget

October 26, 2010

அனைத்து கலவரங்களிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பங்குண்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ் எனப்படும் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும், தடை செய்யவும் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.





உத்தரபிரதேஷ மாநில காங்கிரஸ் தலைவி ரிதா பகுகுணா ஜோஷி நிருபர்களிடம் பேசுகையில் இவ்வேண்டுகோளை குறிப்பிட்டார். இந்த பயங்கரவாத அமைப்பின் மீது மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றும், கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில், தயங்காமல் இந்த இயக்கத்தைத் தடை செய்யவேண்டும்" என்றார் ரிதா.
2007 அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர் எஸ் எஸ் பெருந்தலைவர் ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படுவது குறித்து அவர் சொல்லும்போது, "அநேகமாக, எல்லா இனக்கலவரங்களிலும் இவர்களோ, இவர்களின் துணை அமைப்புகளோ காரணமாய் உள்ளன" என்றார் ஜோஷி.
நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து நாசவேலை செய்யும் ஆர் எஸ் எஸ் ஹைதரபாத் மக்கா மசூதி, ஜெய்ப்பூர். சம்ஜாதா வண்டி உள்ளிட்ட குண்டுவெடிப்புகளிலும் பங்கேற்றுள்ளதாக விசாரணை ஆணையங்கள் சுட்டியதைக் குறிப்பிட்டுள்ளார் ஜோஷி.

Source: inneram.com

No comments:

Post a Comment