Islamic Widget

October 26, 2010

கோவையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 15 பேர் காயம் !

கோவை: கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.


கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள குழுமம் என்ற ஊரின் பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் நான்கு மாணவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையிலும், இன்னும் சிலர் கோவை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு நடந்த குழுமம் என்ற ஊர், கோவையிலுரிந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலும், திருப்பூர் மாவட்டத்தை ஒட்டியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Source: inneram.com

No comments:

Post a Comment