பரங்கிப்பேட்டை: நேற்று காலை அதிரடியாய் இடி, மின்னலுடன் பெய்த மழை பகல் பொழுதில் ஓய்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது. அவ்வப்போது லேசான இடியும் மின்னலும் ஏற்படுகிறது. நேற்று முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேகக் கூட்டங்களின் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை தொடரும் என் வானிலை மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.
நன்றி mypno
No comments:
Post a Comment