பரங்கிப்பேட்டை: கடலூர் பெண்ணையாற்றங்கரையில் கடந்த 12ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் முகம் மற்றும் மார்பு பகுதி எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவரின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் கத்தி வெட்டுக் காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை எரித்துள்ளனர். கொலையான நபர் கைலியும், வெள்ளை நிற சட்டையும் அணித்திருந்தார்.
கையில் 'ரஜினி' என பச்சை குத்தியிருந்தார். மேலும் அவர் 'சுன்னத்' செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே கொலை செய்யப்பட்டவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரெட்டிச்சாவடி காவல் துறையினர், மேற்படி நபர் பரங்கிப்பேட்டையை சார்ந்தவராக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பரங்கிப்பேட்டைக்கு வந்து நோட்டீஸ் வினியோகித்து அறிவிப்பு செய்ததுடன், பகல் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு மீராப்பள்ளிக்கு வருகை புரிந்து ஜமாஅத்தினரிடம் இறந்து போன ஆண் பிரேதத்தின் அங்க அடையாளங்களை கூறி தகவல் கிடைத்தால் தெடார்பு கொள்ள கூறி கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் ரெட்டிச்சாவடி காவல் துறையினர், மேற்படி நபர் பரங்கிப்பேட்டையை சார்ந்தவராக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பரங்கிப்பேட்டைக்கு வந்து நோட்டீஸ் வினியோகித்து அறிவிப்பு செய்ததுடன், பகல் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு மீராப்பள்ளிக்கு வருகை புரிந்து ஜமாஅத்தினரிடம் இறந்து போன ஆண் பிரேதத்தின் அங்க அடையாளங்களை கூறி தகவல் கிடைத்தால் தெடார்பு கொள்ள கூறி கேட்டுக் கொண்டனர்.
நன்றி mypno
No comments:
Post a Comment